Sunday, 28 February 2016

ஒற்றைத் தலைவலி - பாகம் 2

ஒற்றைத் தலைவலியை (MIGRAINE HEADACHE) குறைக்கும் வழி!
நவீன வாழ்க்கை முறை, வேலை நெருக்கடியால் Migraine headache எனப்படும் ஒற்றைத் தலைவலி பாதிப்பு கடுமையாக அதிகரித்துவருகிறது. சரியான வாழ்க்கை முறை, மாற்று மருத்துவ முறைகள் மூலம் இதைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும்.
சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் வளர்ந்தவர்களில் 50 சதவீதம் பேர் ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுகின்றனர். வெளிச்சம், அதிகச் சத்தம் ஆகியவை ஒற்றைத் தலைவலியைத் தூண்டுவதற்கான பொதுவான காரணங்கள். மூக்கடைப்பு, வாந்தி போன்றவை ஒற்றைத் தலைவலியின் அறிகுறிகள்.
தாங்க முடியாத அளவுக்குத் தலையின் ஒரு பகுதியில் ஏற்படும் வலி, மிதமாகவோ / அதிகபட்ச அளவிலோ 4 மணி நேரம் முதல் 3 நாட்களுக்கு (72 மணி நேரம்வரை) நீடிக்கலாம். ஒற்றைத் தலைவலி ஒருமுறை வந்துவிட்டால், அதன் பின் அடிக்கடி வருவதற்கு வாய்ப்பு உண்டு.
போதிய அளவுக்கு ஓய்வு எடுக்காமல் இருப்பது, சத்தான உணவைச் சரியான நேரத்துக்குச் சாப்பிடாமல் இருப்பது, மாறிவரும் வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் ஒற்றைத் தலைவலியால் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர்.
* ஆயுர்வேத அணுகுமுறை
வாழ்க்கை முறையை மாற்றி அமைப்பதன் மூலம் ஒற்றைத் தலைவலியிலிருந்து நிவாரணம் பெறலாம். பொதுவாக வலி தோன்றும் பகுதியில் குளிர்ந்த நீரை வைப்பது தற்காலிக நிவாரணம் தரும்.
ஆயுர்வேத சிகிச்சையில் இதற்கு நிவாரணம் கிடைக்கும். மீண்டும் வராமல் தடுக்கவும் முடியும். மன இறுக்கம், வேலைச் சூழல், ஹார்மோன் சமநிலையில்லாமை போன்ற காரணங்கள் ஒற்றைத் தலைவலிக்கு வழிவகுக்கின்றன. ஆயுர்வேதத்தில் இதை `சூர்யவர்தா’ என்று குறிப்பிடுகிறோம்.
தலையில் உள்ள நரம்புகள், ரத்தச் செல்கள் வீக்கமடைவதால் ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது. உணர்ச்சிமிகுந்த - இறுக்கமான மனநிலை, வேலைச் சூழலால் அதிகரிக்கும் பணிப் பளு, உடல் அழற்சி, உணவுப் பழக்கத்தில் சீரற்ற நிலை, மது அருந்துதல், புகையிலை போடுதல், அதிக அளவில் மருந்து சாப்பிடுவது ஆகியவை காரணமாக ஒற்றைத் தலைவலி எனப்படும் `Migraine headache’ உருவாகிறது.
பெண்களுக்குப் பொதுவாக ஹார்மோன் சீரற்ற நிலையால் அதாவது மாதவிடாய் காலம், குழந்தைப்பேறு காலம், மாதவிடாய் சுழற்சி நிற்கும் வேளைகளில் இது தோன்றுகிறது.
* வேலை இறுக்கம்!
இப்போது இளைஞர்கள் பலரும் ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுவதைக் காண முடிகிறது. பெரும்பாலும் அவர்களுடைய வேலை காரணமாக இளைஞர்களை இத்தலைவலி பாதிக்கிறது. இலக்கை எட்ட வேண்டிய நிர்ப்பந்தம், அதிக நேரம் கணினி வேலை காரணமாக ஒற்றைத் தலைவலி தூண்டப்படுகிறது.
* எப்படிச் சமாளிக்கலாம்?
நோயாளியின் உடல் அமைப்பைச் சரியாகக் கணித்து, அவரது பின்னணியை அறிந்துகொள்ள வேண்டும். அவரது உளவியல், உடலியல் சார்ந்த விஷயங்களைச் சரிவரக் கணித்து அவருக்கு ஏற்பட்டுள்ள ஒற்றைத் தலைவலியின் அளவை மதிப்பிட வேண்டும்.
குறிப்பாக 3 முக்கிய வழிகளைப் பின்பற்றுவதன் மூலம் ஒற்றைத் தலைவலியிலிருந்து நிவாரணம் பெறலாம். சரியான உணவுப் பழக்கம், வாழ்க்கை முறையில் மாற்றம் மற்றும் ஆயுர்வேத சிகிச்சை ஆகியவை தான் அந்த மூன்று வழிகள்.
* வாழ்க்கை முறை மாற்றம்!
இறுக்கமான சூழலிலிருந்து விலகி ஒய்வெடுப்பது. அதிக இரைச்சல் மற்றும் பிரகாசமான ஒளி ஆகியவற்றைத் தவிர்ப்பது.
* உணவுப் பழக்கம்!
சரியான உணவு வகைகளை உண்பதன் மூலம் நோயாளியின் உடலியல் கூறுகள் மாறுபடும். இது தலைவலி உருவாவதற்கான காரணிகளை மட்டுப்படுத்தும். மேலும் தலைவலி அதிகரிப்பதைக் குறைக்கும். அதிக மசாலா சேர்க்கப்பட்ட உணவு வகைகள், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவு வகைகள், புளிப்புச் சுவையுள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். சரியான நேரத்துக்குச் சாப்பிடுவது, உணவை மென்று சாப்பிடுவது ஆகியனவும் தலைவலியின் வீரியத்தைக் குறைக்கும்.
* இரண்டு கட்ட சிகிச்சை!
தலைவலியின் தன்மைக்கேற்ப ஆயுர்வேத சிகிச்சை முறை 2 கட்டங்களாக அளிக்கப்படுகிறது. வேகவஸ்தா – தலைவலி ஏற்படும்போது, அவெகவஸ்தா – தலைவலி இல்லாதபோது என இரண்டு வகைப்படும்.
* வேகவஸ்தா சிகிச்சையின்போது ஆயுர்வேத முறைப்படி சாப்பிடக்கூடிய மருந்துகள் அளிக்கப்படுகின்றன. இவை வயிற்றைச் சுத்தம் செய்ய உதவும். வயிற்றில் தங்கியுள்ள நச்சுகளை அகற்ற இவை உதவும். இதுதவிர வெளிப் பயன்பாட்டுக்குச் சில எண்ணெய்கள் தரப்படுகின்றன. இது ரத்த நாளங்களைச் சீராக்கி ரத்த ஓட்டத்தைச் சமன் செய்கிறது.
* அவெகவஸ்தா முறையில் ஒற்றைத் தலைவலி இல்லாத வேளையிலும் தற்காப்பு மருந்துகளை மருத்துவர் அளிப்பார். இதன்மூலம் ஒற்றைத் தலைவலி அடிக்கடி ஏற்படுவது தடுக்கப்படும். ஆயுர்வேத சிகிச்சையில் நஸ்யம், சிரோத்ரா, சிரோவஸ்தி ஆகிய சிகிச்சைகள் இதற்கு அளிக்கப்படுகின்றன.
* மற்ற சிகிச்சைகள்
நஸ்யம்!
இந்த முறையில் மருத்துவக் குணங்கள் கொண்ட எண்ணெயைத் தலை, முகத்தில் தடவ வேண்டும். அது நன்கு ஊறிய பிறகு நாசித் துவாரங்களில் சில மருந்துகளை ஊற்ற வேண்டும். ஆயுர்வேத சிகிச்சையில் அளிக்கப்படும் மருந்துகளின் அளவு, அவற்றின் தன்மை ஆகியவை நோயின் வீரியத்துக்கு ஏற்பவும் நோயாளியின் வயதுக்கு ஏற்பவும் பருவ நிலைக்கு ஏற்பவும் மாறுபடும். நஸ்யம் சிகிச்சையின்போது வீக்கமடைந்த பகுதிகள், பாதிக்கப்பட்ட பகுதிகள் சீரடையும். இந்தச் சிகிச்சையைக் குறைந்தது 7 நாட்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
* சிரோவஸ்தி
வெதுவெதுப்பான நீரில் மருந்து எண்ணெயை ஊற்றி, இதற்கென விசேஷமாக வடிவமைக்கப்பட்ட தொப்பியாக அணிந்துகொள்ள வேண்டும். இந்த வகை சிகிச்சை மன இறுக்கம் சார்ந்த ஒற்றைத் தலைவலிக்கு மிகச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.
 வாழ்நாளில் தலைவலியை எப்போதாவது ஒரு சமயம் அனுபவித்திருக்காதவர் இருக்கவே முடியாது. தலைவலிக்குப் பெரும்பாலும் பரபரப்புத் தன்மையே காரணம்.ஒருவர் இளமைக் காலத்தில், 20 முதல் 40  வயது வரை பரபரப்புடன் செயல்படுவதால் அக் காலகட்டங்களில் தலைவலி வருவது இயல்பாக உள்ளது.  முதுமையில் தலைவலியின் தாக்கம் குறையத் தொடங்கி விடும். வலி தலையில்தான் என்றாலும் கூட,கண் கோளாறால் ஏற்படும் சாதாரண தலைவலி உள்பட ஒற்றைத்  தலைவலி வரை அறிகுறிகள் வேறுபடும். தலைவலியைப் பொருத்தவரை அது வந்து போகும் கால அளவு  கருத்தில் கொள்ளப்பட வேண்டிய விஷயம். உதாரணமாக இரண்டு மாதத்திற்கு அல்லது ஆறு மாதத்திற்கு  ஒரு முறை வரும் தலைவலிக்குத் தொடர் சிகிச்சை தேவை இல்லை. ஆனால் அடிக்கடி தலைவலி வரும்  நிலையில் சுயமாக மாத்திரை சாப்பிட்டுக் கொண்டே இருக்காமல் மருத்துவ சோதனை அவசியம்.
இனி ‘தலைவலி’ இல்லாதபோது நீங்கள் படித்துத் தெரிந்துகொள்ள……
தலைவலிக்கும் மூளைக்கும் உள்ள தொடர்பு என்ன?
மூளையை அறுத்தால் எந்த வலியும் ஏற்படாது. ஏனெனில் மூளைக்குள் நரம்புகள் கிடையாது என்பதால்  உணர்ச்சி கிடையாது. ஆனால் மூளைக்கு வெளியே உள்ள மூளை உறை, எலும்பு உறைகள், ரத்தக் கு ழாய்கள், தோல் ஆகியவற்றை ஒட்டி வலிகளை உணர்த்தக்கூடிய நரம்புகள் உள்ளன. இந்த உறுப்புகளில்  பாதிப்பு ஏற்டும் நிலையில் நரம்பு மூலமாக தலைவலி ஏற்படுகிறது. சைனுசைட்டிஸ் நோய்ப் பிரச்சினை  இருந்தாலும் தலைவலி வரும்.
பரபரப்பு,சரியான நேரத்துக்குச் சாப்பிடாமல் இருத்தல் உள்பட பல காரணங்களால் நோய்களின் பின்னணி  இன்றித் தலைவலி வரலாம். சைனுசைட்டிஸ்  மூளைக் காய்ச்சல் உள்பட நோய்கள் காரணமாகவும்  தலைவலி வரக்கூடும்.
பொதுவான தலைவலிகள் யாவை?
1. குறைத் தூக்கத்தால் ஏற்படும் தலைவலி; 2. அதிகத் தூக்கத்தால் ஏற்படும் தலைவலி; 3. பசியினால்  ஏற்படக்கூடிய தலைவலி; 4. தாமதமாகச் சாப்பிடுவதால் ஏற்படும் தலைவலி; 5. குறைவாகச் சாப்பிடுவதால்  ஏற்படக்கூடிய தலைவலி; 6. விரதம் இருப்பதால் ஏற்படும் தலைவலி; 7. பழகிவிட்ட குறிப்பிட்ட நேரத் துக்குக் காபி குடிக்காமல் இருப்பதால் ஏற்படும் தலைவலி; 8. ஐஸ்கிரீம், சாக்லேட் போன்ற உணவுப்  பொருள் ஒவ்வாமை காரணமாக ஏற்படும் தலைவலி; 9. பதற்றத்தால் ஏற்படும் தலைவலி; 10. பார்வைக்  கோளாறு காரணமாக ஏற்படும் தலைவலி; 11. சைனுசைட்டிஸ் காரணமாக ஏற்படும் தலைவலி; 12. காதில்  சீழ் பிடிப்பதால் ஏற்படும் தலைவலி; 13. மதுப் பழக்கம் காரணமாக ஏற்படும் தலைவலி; 14. மருந்து களினால் ஏற்படும் தலைவலி; 15. எதிர்பார்ப்பு நிறைவேறாமல் ஆழ்ந்த மன வருத்தம்  (Depression) காரணமாக ஏற்படும் தலைவலி; 16. வாகனப் புகை காரணமாக ஏற்படும் தலைவலி.
தலைவலி என்று ஒருவர் சொன்னாலே கண் மருத்துவ சோதனை செய்து கொள்ளுமாறு நண்பர்கள்  கூறுவது வழக்கமாக உள்ளதே? இந்தக் கருத்து சரியா?
சரி அல்ல. கண் நரம்புகளுக்கும் மூளைக்கும் தொடர்பு உள்ளது. எனினும் கண் தசைகளுக்கு அதிக வேலை கொடுக்கும் புத்தகம் படித்தல், கம்ப்யூட்டரில் வேலை செய்தல்,பார்வைக்கோளாறு ஆகியவை  காரணமாக தலைவலி வந்தால் கண்டாக்டரிடம் சென்று பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.  சாதாரணமாக தலைவலி வரும் நிலையில் மருத்துவரிடம் அல்லது நரம்பியல் மருத்துவரிடமோ சென்றால்  போதும்.
காய்ச்சல் காரணமாக தலைவலி வருவது ஏன்?
காய்ச்சலின்போது உடலில் ரத்த ஓட்டம் அதிகமாகும்.இதனால் ரத்தக்குழாய்கள் விரிவடைந்து தலைவலி ஏற்படுகிறது. உயர் ரத்த அழுத்த அளவு (Systolic Pressure) இயல்பான அளவைவிட அதிகரிக்கும் நிலையிலும் தலைவலி வரும்.
தலைவலியின் வகைகள் யாவை?
தலைவலியை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.
1. பரபரப்புத் தன்மை காரணமாக ஏற்படும் தலைவலி
(Tension Type Headache);
2. ஒற்றைத் தலைவலி (Migraine); 3. தொகுப்புத் தலைவலி (Cluster Headache); 4.  நாள்பட்ட நித்தம் தலைவலி (Chronic Daily Headache).
‘டென்ஷன்’ காரணமாக ஏற்படும் தலைவலியின் குறிப்பிட்ட அறிகுறிகள் என்ன?
ஒரு வேலையை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்க வேண்டும் என்ற டென்ஷன் காரணமாக தலைவலி  ஏற்படலாம். வேலைப்பளு, அதிக தூக்கம், நீண்டதூரப் பயணம், உடல் தசைகள் அதிக அளவுக்குச் சுரு ங்குதல் காரணமாக இத்தகைய தலைவலி வரும். பொதுவாக இந்தத் தலைவலி தாங்கக்கூடியதாக இருக்கும்.  இந்தத் தலைவலியில் வாந்தி, குமட்டல் இருக்காது. வெளிச்சத்தைக் கண்டால் கண் கூசுதல், ஓசையைக்  கேட்டாலே வெறுப்பு ஆகிய உணர்வுகள் இருக்காது.
எனினும் தசைகள் அதிக அளவுக்குச் சுருங்குதல் காரணமாக டென்ஷன் தலைவலி ஏற்படும் நிலையில்  தலையில் கை வைக்க முடியாத அளவுக்கு, சீப்பைக் கொண்டு தலையை வார முடியாத அளவுக்கு வலி  இருக்கும்.
ஒற்றைத் தலைவலியின் முக்கிய அறிகுறிகள் என்ன?
மாதக் கணக்கில், வருஷக் கணக்கில் விட்டு விட்டு வரும் தலைவலி ஒற்றைத்தலைவலி (‘மைக்ரேன்’   Migraine) எனப்படுகிறது. பெயருக்கு ஏற்றாற்போல் இந்த வலி தலையில் ஒரு புறம் மட்டுமே  வரலாம்; தலையில் இரு புறமும் மாறி, மாறியும் அல்லது பிடரியில் வலி வந்தாலும் ஒற்றைத்  தலைவலிதான்.
மக்கள் தொகையில் 10ல் ஒருவருக்கு ஒற்றைத் தலைவலி பிரச்சினை உள்ளது. ஒருவரது இயல்பான  வாழ்க்கையை முடக்கும் ஆற்றல் ஒற்றைத் தலைவலிக்கு உண்டு. அதாவது மருத்துவ விடுப்பு எடுத்துச்  சிகிச்சை பெறும் அளவுக்கு இந்தத் தலைவலி இருக்கும்.
சுத்தியல்களால் அடிப்பதுபோல் வலி மண்டையைப் பிளக்கும். வாந்தி, குமட்டல் இருக்கும். வெளிச்சத்தைப்  பார்த்தால் கண்கள் கூசும். இந்த வலி வரும்போது ஓசையைக் கேட்டாலே வெறுப்புணர்வு ஏற்படும்.  தலையைக் குனிந்தால் வலி ஏற்படும். நடந்தால் தலைவலி அதிகமாகும். உடலின் சிறு அதிர்வு களுக்குக்கூட வலி அதிகமாகி வாந்தி வரும்.வாசனை காரணமாகவும் ஒற்றைத் தலைவலி ஏற்படலாம். மேலே சொன்ன பொதுவான தலைவலிகளும் (குறைத் தூக்கம், பசி, ஐஸ்கிரீம், சாக்லெட் போன்ற உணவுப்  பொருள்கள்…..) ஒற்றைத் தலைவலியைத் தூண்டும்.
ஒற்றைத் தலைவலிப் பிரச்சினைக்கு பாரம்பரியத் தன்மை உண்டா?
உண்டு. குடும்பத்தில் அப்பா, அம்மா, மாமா, சித்தப்பா, உடன் பிறந்தோர் ஆகியோரில் யாராவது ஏற்கெனவே ஒற்றைத் தலைவலியால் பாதிக்கப்பட்டிருந்தால் ஒற்றைத் தலைவலி பிரச்சினை வர வாய்ப்பு  உண்டு. ஆண்களைவிட பெண்களே ஒற்றைத் தலைவலி பிரச்சினையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.  குறிப்பாக மாதவிடாய் வருவதற்கு முன்பு பெண்களுக்கு ஒற்றைத் தலைவலி ஏற்படுகிறது.கர்ப்பிணிப் பெ ண்களுக்கு ஒற்றைத் தலைவலி வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
தொகுப்புத் தலைவலியின் (Cluster Headache) அறிகுறிகள் என்ன?
ஒற்றைத் தலைவலியில் மிகவும் கொடியது இந்த வகை (சிறீustமீக்ஷீ பிமீணீபீணீநீலீமீ). இந்தத்  தலைவலி பெரும்பாலும் ஆண்களுக்குத்தான் வரும். இந்தத் தலைவலி தூக்கத்தில் வரும். தூங்கிக்  கொண்டிருக்கும் நோயாளிக்கு வலியை உருவாக்கி அவரை எழச் செய்யும் ஆற்றல் இந்த வகை ஒற்றைத்  தலைவலிக்கு உண்டு. ஏதாவது ஒரு பக்கம் மட்டுமே இந்தத் தலைவலி இருக்கும். வலி வரும் பக்கத்தில்  உள்ள மூக்குத் துவாரத்திலிருந்து மூக்கில் நீர் ஒழுகும். ஒரே நாளில் மூன்று அல்லது நான்கு முறை இந் தத் தலைவலி வரும். வாந்தி, குமட்டல் இருக்காது. வலி போகும் வரை தூக்கம் வராது. மதுப் பழக்கம்  உள்ளவர்களுக்கு இது போன்ற தலைவலி வரும்.
நாள்பட்ட நித்தம் நித்தம் தலைவலி (Chronic Daily Headache) அறிகுறிகள் என்ன?
பரபரப்புத் தன்மையால் ஏற்படும் தலைவலி (Tension Type Headache), ஒற்றைத் தலைவலி  (Migraine) ஆகியவை காரணமாக தினந்தோறும் மருந்து சாப்பிடும் பழக்கத்தை சிலர்  மேற்கொள்வர். ஒரு கட்டத்தில் மருந்துக்குக் கட்டுப்படாத தலைவலியாக மாறி நித்தம் நித்தம் தலைவலி  வரக்கூடும். இத்தகைய வலி வருவோருக்கு வலி வருவதற்கு முன்பே தலைவலி மாத்திரையைச் சாப்பிடும்  பழக்கம் இருக்கும்.
பிடரியில் (தலையில் பின்புறம்) வலி வந்தால் கழுத்தில் பிரச்சினை எனக் கொள்ள வேண்டுமா?
கழுத்தில் ஏழு எலும்புகள் உள்ளன. இதில் மேல் புறம் உள்ள முதல் மூன்று எலும்புகளுக்கும் மூ¬ ளக்கும் தொடர்பு உண்டு. இந்த எலும்புகளில் பிரச்சினை ஏற்படும் நிலையில் தலையின் பின்புறம் வலி  ஏற்படும். இந் நிலையில் கழுத்தைத் திருப்புவதும் சிரமமாக இருக்கும். எக்ஸ்ரே உள்பட பரிசோதனைகள்  செய்துகொண்டு சிகிச்சை பெறுவது அவசியம். ஏனெனில் ஒற்றைத் தலைவலி காரணமாகவும் பிடரியில்  வலி ஏற்பட வாய்ப்பு உண்டு.
தலைவலி சிகிச்சையில் முக்கியமாகக் கருத்தில் கொள்ளப்படுவது என்ன?
ஒருவருக்கு எவ்வளவு கால இடைவெளி விட்டு தலைவலி வருகிறது என்பதைப் பொறுத்து சிகிச்சை  தேவையா என்பது தீர்மானிக்கப்படுகிறது. ஒரு சிலருக்கு ஒரு மாதத்துக்கு ஒரு முறை தலைவலி வரலாம்.  ஒரு சிலருக்கு மூன்று நாளுக்கு ஒரு முறை மூன்று மணி நேரம் தலைவலி வந்து போகலாம்.ஒரு சில ருக்கு ஆறு மாதத்துக்கு ஒரு முறை தலைவலி வரலாம். ஒரு சிலருக்கு தினந்தோறும் தலைவலி வரலாம்.  ஒரு சிலருக்கு தொடர்ந்து மூன்று அல்லது நான்கு நாள்களுக்குத் தலைவலி இருக்கலாம்.
எப்போதாவது ஒரு முறை வரும் தலைவலிக்குச் சிகிச்சை தேவை இல்லை. பசி, நேரம் கழித்துச் சாப்பிடு தல், போதிய தூக்கம் இல்லாமை உள்பட பொதுவான தலைவலிகளுக்கு அவற்றுக்கு உரிய காரணங்களை  நோயாளிகள் தாங்களாக தவிர்த்துவிடுவதே எளிய சிகிச்சையாகும். குறிப்பாக அதிக அலைச்சலால் ஏற்ப டும் தலைவலிக்கு ஓய்வு எடுத்தாலே சரியாகிவிடும். ஆனால் ஒற்றைத் தலைவலி உள்பட அடிக்கடி வரும்  தலைவலிக்கு மருத்துவப் பரிசோதனை செய்து உரிய காரணத்தைக் கண்டுபிடித்துச் சிகிச்சை அளிப்பது  அவசியம்.
சிகிச்சை தேவையா என்பதைக் கண்டறிவது எப்படி?
பாரம்பரியத் தன்மை உள்பட நோய் குறித்து நோயாளி கூறுவதை (Patient History)  முதலில் கேட்க வேண்டும் பின்னர் நோயாளியின் இரத்த அழுத்தத்தைப் பரிசோதிப்பது அவசியம்.  இதையடுத்து மூளையின் அதிக அழுத்தம் இருந்தால் வெளிப்படுத்தக்கூடிய ‘ஆப்தல்மஸ்கோப்’ கருவி  மூலம் கண்களைப் பரிசோதனை செய்ய வேண்டும். இப்பரிசோதனையில் மூளைக்குச் செல்லும் பார்வை  நரம்பு வீக்கம் அடைந்திருந்தால் (Papilloedema) தெரிந்துவிடும். இதனால் மூளையில் அழுத்தம்  அதிகமாக இருக்கும். இதுபோன்ற நிலையில் மேற்கொண்டு சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்ற  மருத்துவப் பரிசோதனைகள் செய்ய வேண்டியிருக்கும்.
ஒற்றைத் தலைவலியின் சாதக அம்சம் என்ன?
ஒற்றைத் தலைவலியால் அவதிப்படுவோருக்கு வலிவருவதற்கு முன்பே தெரிந்து விடும். இந்நிலையில் மு ன்கூட்டியே மாத்திரையைச் சாப்பிடுவதன் மூலம் வலி கடுமையாகாமல் பார்த்துக்கொள்ள முடியும்.
ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சனைக்கு ஆயுள் முழுவதும் மாத்திரை சாப்பிட வேண்டுமா?
முன்பே சொன்னது போல் வயது ஆக ஆக தலைவலிப் பிரச்சனை குறைந்துவிடும். எனவே ஆயுள்  முழுவதுக்கும் மாத்திரைகள் சாப்பிடும் தேவை இருக்காது. தலைவலிக்கு உரிய காரணத்தைக் கண்டறிந்து  மருந்து சாப்பிடுவது அவசியம்.
தலைவலிக்கான நிவாரண மருந்துகளை (Balms) நெற்றியில் தடவிக் கொள்வது நல்லதா?
தவறில்லை. எப்போதாவது வரும் தலைவலிக்கு இந்த நிவாரண மருந்துகள் பலன் அளிக்கக் கூடியவை.  இதே போன்று துணி  கர்சீப்பால் தலையை இறுகக் கட்டிக் கொள்வதிலும் தவறில்லை. துணியால் கட் டும்போது ரத்தக் குழாய்கள் விரிவடையாமல் தடுக்கப்பட்டு நிவாரணம் கிடைக்கிறது. ஒற்றைத் தலைவலி ஏற்படும் நிலையிலும் இது போன்ற நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
அடிக்கடி தலைவலி வரும் நிலையில் காரணத்தைக் கண்டறிந்து, வராமல் தடுப்பதற்குச் சிகிச்சை செய்து கொள்வது அவசியம். அடிக்கடி தலைவலி வரும் நிலையில் தடுப்புக்கு மட்டுமே மாத்திரைகள் உதவும்;  அப்போது வலியிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு மேலே சொன்ன கை வைத்திய முறைகள் பலன் அளிக்கும்

1 comment: